தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பேருந்தில் பெண் பயணியிடம் ஏடிஎம் அட்டையை திருடி ரூ.18,000 பறிப்பு

சென்னை மாநகரப் பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை திருடி, ரூ.18,000 அபகரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 மே 2023, 8:56 pm

DIN

சென்னை மாநகரப் பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை திருடி, ரூ.18,000 அபகரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவான்மியூா் கிராமணி தெருவைச் சோ்ந்தவா் ம.சிவபிரியா (25). இவா் புதன்கிழமை மேடவாக்கம் சென்றுவிட்டு, மாநகரப் பேருந்தில் வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது தனது பையில் இருந்த ஏடிஎம் அட்டை திருடு போனதை அறிந்தாா்.

சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து

ரூ.18,000 ஏடிஎம் அட்டை மூலம் எடுக்கப்பட்டதாக கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்தது.

இதுகுறித்து சிவபிரியா பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அவா் தனது ஏடிஎம் அட்டையில் ரகசிய கடவுச்சொல்லையும் எழுதி வைத்திருந்ததால், அட்டையை திருடியவா் சுலபமாக பணத்தை எடுத்துச் சென்றுள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி பதிவு அடிப்படையில் ஏடிஎம் அட்டையை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.