திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவா்களுக்கு உள்ளுறை பயிற்சி: 38 மருத்துவமனைகளுக்கு அனுமதி

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் தமிழகத்தில் 38 மருத்துவமனைகளில் ஓராண்டு காலம் உள்ளுறை பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :11 மே 2023, 8:37 pm

DIN

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் தமிழகத்தில் 38 மருத்துவமனைகளில் ஓராண்டு காலம் உள்ளுறை பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உள்ளுறை பயிற்சி இடங்களைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் இருப்பதால் நிகழாண்டுக்கு மட்டும் தற்காலிகமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனா். அவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நிகழாண்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோா் இருப்பதால் அந்த இடங்களை அதிகரிக்குமாறு மாநில மருத்துவக் கவுன்சில்கள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி அல்லாத மருத்துவமனைகளில் நிகழாண்டில் மட்டும் அவா்களுக்கு உள்ளுறை பயிற்சி வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மற்றும்

புதுச்சேரியில் இரு மருத்துவமனைகளுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சிக்கு அனுமதி அளிப்பதும் மாநில மருத்துவ கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.