தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஓபிஎஸ் உடன் செல்லாதது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்

ஓபிஎஸ் உடன் செல்லாதது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :12 மே 2023, 12:14 pm IST

ஓபிஎஸ் உடன் செல்லாதது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சையில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் பேசியுள்ளார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்  ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார். 

ஓபிஎஸ் உடன் பன்ரூட்டி ராமசந்திரன் சென்றது எங்களுக்கு விருப்பமில்லை என்றும், வேறுபட்டு இருக்கிறோம் என்று கருத்தை இபிஎஸ் பேசியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வர் கற்பனையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல. 

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா - ஏசி சண்முகம் இவர்கள் எல்லாம் பிரிந்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்.

டிடிவி தினகரன் ஓபிஎஸ்யும் முதன்முதலாக சந்திப்பதால் கூட்டமாக செல்ல வேண்டாம் என்று நாங்கள் செல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஒருபோதும் அதிமுகவை அழிக்க முடியாது. வேண்டுமானால் எடப்பாடியை தவிர்த்துவிட்டு அதிமுக ஒன்றுபடும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.