புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். 

News image

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கேக் வெட்டி நிர்வாகிகளுடன் பிறந்தநாளை கொண்டாடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி.

Updated On :12 மே 2023, 11:38 am IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 69 ஆவது பிறந்த நாளை சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி  இன்று கொண்டாடினார். இதனையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை முதற்கொண்டு முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 69 கிலோ கேக்கினை வெட்டினார். இதேபோன்று பல்வேறு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கொண்டு வந்த கேக்குகளையும் வெட்டி கட்சி தொண்டகளுக்கு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சீருடை, புடவை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

 அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி கே. பழனிசாமி கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.