விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

செழிப்பு இயற்கை உரத்தை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

செழிப்பு எனும் பெயரிலான இயற்கை உரத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

News image
Updated On :12 மே 2023, 2:34 pm IST

செழிப்பு எனும் பெயரிலான இயற்கை உரத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். ஈரக்கழிவுகளில் இருந்து  தயாரிக்கப்படும் உரத்திற்கு செழிப்பு என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

மாகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிகளையும் கானொளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 புதிய விளையாட்டு திடல்கள், 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னையில் ரூ.561.26 கோடி செலவில் முடிவுற்ற 14 திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான கியூஆர் கோடு மென்பொருள் செயலியை முதல்வர் தொடக்கி வைத்தார்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட 19 பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குடிநீர்  வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.201 கோடி மதிப்புள்ள 9 புதிய பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.