

சென்னை: நாமக்கள் ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுள்ள பெண் ஒருவர் மார்ச் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறார் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். வழ்க்கு புலன் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு(சிபிசிஐடி) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.