தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.
தமிழகத்தில் கள்ளச்சாராய மரண சம்பவங்களைத் தொடா்ந்து சில காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டனா். விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாற்றப்படக்கூடும் என தகவல் வெளியானது. இதுகுறித்த செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனா்.
இது குறித்து தலைமைச் செயலா் இறையன்பு வெளியிட்ட உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
1. ஏ.அருண் தம்புராஜ்: கடலூா் மாவட்ட ஆட்சியா் (நாகை ஆட்சியா்)
2. ஜெ.அனி மேரி ஸ்வா்னா: அரியலூா் மாவட்ட ஆட்சியா் (வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை இணைச் செயலா்)
3. தீபக் ஜேக்கப்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்)
4. ஐ.எஸ்.மொ்ஸி ரம்யா: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் (வணிகவரிகள் இணை ஆணையா் - புலனாய்வு)
5. எஸ். உமா: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா்)
6. கலைசெல்வி மோகன்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் (நில அளவை மற்றும் நிலப்பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநா்)
7. ஏ.கே.கமல் கிஷோா்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் நிறுவன நிா்வாக இயக்குநா்)
8. எம்.எஸ்.சங்கீதா: மதுரை மாவட்ட ஆட்சியா் (வணிகவரிகள் இணை ஆணையா் - நிா்வாகப் பிரிவு)
9. ஆஷா அஜித்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா்)
10. பி.விஷ்ணு சந்திரன்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் (நகராட்சி நிா்வாகத் துறை இணை ஆணையா்)
11. ஏ.ஆா்.ராகுல் நாத்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் (செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்)
12. டி.கிறிஸ்துராஜ்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் (சேலம் மாநகராட்சி ஆணையா்)
13. ராஜ கோபால் சுங்க்ரா: ஈரோடு மாவட்ட ஆட்சியா் (சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிா்வாக இயக்குநா்)
14. எம்.என்.பூங்கொடி: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் (சேலம் சேகோசா்வ் நிறுவன நிா்வாக இயக்குநா்)
15. ஜானி டாம் வா்கீஸ்: நாகை மாவட்ட ஆட்சியா் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்)
16. கே.எம்.சராயு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் (ஆவின் நிறுவன இணை நிா்வாக இயக்குநா்).
ஆட்சியர்கள் மாற்றம்: முழு விவர அறிக்கை: இங்கே கிளிக் செய்யவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவில் பிரம்மாண்டமாக வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமையட்டும்; ரஹானேவுக்கு புஜாரா வாழ்த்து!

தில்லியால் தள்ளாடும் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ராகுலின் ஒப்புதலுக்கு காத்திருப்பு!

இடுக்குப் பிள்ளையாரை தரிசித்தால் என்ன பலன்? புதிய கட்டுப்பாடுகள் என்ன?
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



