சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

News image
Updated On :16 மே 2023, 3:26 am

DIN

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில்  ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. பாடல் பெற்ற தலம், நளச் சக்கரவர்த்திக்கு தோஷ நிவர்த்தி கிடைத்த தலம் என்ற பெருமைகள் உள்ளன.

Story image

இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் தலமாக இது விளங்குகிறது. 

இக்கோயிலில்  ஆண்டுதோறும் பிரம்மோற்சவம்  பல்வேறு  நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. 

Story image

முறைப்படி உற்சவம் தொடங்கும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 5.30-க்கு மேல்  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 7.30 மணிக்கு மேல்   கம்பத்தில்  ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு முன்னதாக கம்பத்தில் ஏற்றப்படும் கொடியை பல்லக்கில் வைத்து  நான்கு வீதிகளின் வழியாக கோயிலுக்கு கொண்டுவந்தனர். 

தொடர்ந்து கொடிக் கம்பத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இக்கோயிலில் உள்ள மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரருக்கு தர்பை புல் விசேஷமானது. இதையொட்டி கொடிக் கம்பத்தை சுற்றி தர்பை கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. 

கொடியேற்ற நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பஞ்சமூர்த்திகளான ஸ்ரீ சொர்ணகணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா எழுந்தருளினர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் 30-ஆம் தேதியும்,  தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் 31-ஆம் தேதி வீதியுலாவும், ஜூன் 1-ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.