விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கள்ளச்சாராய பலிகள்: அறிக்கை கோரினார் ஆளுநர்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலரிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கோரியுள்ளார். 

News image

ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)

Updated On :17 மே 2023, 2:07 pm

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலரிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கோரியுள்ளார். 

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களையும் அறிக்கையாக ஆளுநர் கேட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள பெருங்கரணை கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க தலைமைச் செயலர் வெ.இறையன்புவிடம் ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுள்ளார். 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது எப்படி? விற்கப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது போன்ற விவரங்களையும் அறிக்கையாக சமர்ப்பிக்கக் கோரியுள்ளார். 

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.