இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கள்ளச்சாராய பலிகள்: அறிக்கை கோரினார் ஆளுநர்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலரிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கோரியுள்ளார். 

News image
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
Updated On :6 பிப்ரவரி 2024, 12:57 pm

DIN

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலரிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கோரியுள்ளார். 

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களையும் அறிக்கையாக ஆளுநர் கேட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள பெருங்கரணை கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க தலைமைச் செயலர் வெ.இறையன்புவிடம் ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுள்ளார். 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது எப்படி? விற்கப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது போன்ற விவரங்களையும் அறிக்கையாக சமர்ப்பிக்கக் கோரியுள்ளார். 

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.