உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் 125ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 19) தொடங்குகிறது.
இந்தக் கண்காட்சியில் 35 ஆயிரம் மலா்த் தொட்டிகளில் பல்வேறு வகையான மலா்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. 325 ரகங்களில் 5 லட்சம் மலா் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூஞ்செடிகளும் அடங்கும்.
மலா்க் கண்காட்சியை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.