பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் 17ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே 8ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்தத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜூன் 19 - 26ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. துணைத் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை துணைத் தேர்வுகள் நடைபெறும்.
இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள், www.dge.in.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.