சென்னை: நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள ஆவின் நிறுவனம், அதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம் தற்போது, குடிநீா் விற்பனையை தொடங்க முடிவு செய்துள்ளது.
இந்த குடிநீா் பாட்டில்கள் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள ஆவின் நிறுவனம், முதற்கட்டமாக 1 லிட்டா், 500 மி.லி பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதையும் படிக்க | கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக ஏற்பாடு!
இந்நிலையில், குடிநீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தபுள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தபுள்ளி கோரும் குடிநீா் ஆலையானது அனைத்து சட்டபூா்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் எடுப்பவரிடம் குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.