கோவையில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள்: மக்கள் அதிர்ச்சி! 

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோயில் வீதியில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள்: மக்கள் அதிர்ச்சி! 
Published on
Updated on
2 min read


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோயில் வீதியில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 66 ஆவது வார்டுக்கு உட்பட்ட கருப்பராயன் கோயில் வீதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் இருக்கும் குடிநீர் குழாயில் கடந்த சில மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி வருகிறது. குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்போது முதலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாக்கடை நீர் குடிநீருடன் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் சாக்கடை துர்நாற்றம் வீசுகிறது. 

இந்த நிலையில் மக்கள் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் குழாயை பயன்படுத்தாமல், அருகே உள்ள குடியிருப்புகளிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல முதியவர்கள் சில தூரம் நடந்து சென்று குடிநீர் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள் கலந்து வந்த நீர்

இந்த நிலையில் நேற்று குடிநீர் குழாயில் குடிநீர் வந்தபோது ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாக்கடை கழிவுகள் கலந்து வந்த நீரை அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் உள்ள டேங்குகளில் நிரப்பினர்.

ஆனால், நேற்று வந்த குடிநீர் முழுவதும் சாக்கடை கழிவுகள் கலந்தே வந்துள்ளது. இதனால் தண்ணீர் டேங்குகளில் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்களது தண்ணீர் டேங்கில் இருந்த தண்ணீர்களை வெளியேற்றிவிட்டு தூய்மைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை மாலையும் குடிநீர் வந்தபோதும் குழாயில் இருந்து சாக்கடை கழிவுகள் கலந்து வந்துள்ளது. இதனால் மக்கள் காலி குடங்களுடன் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

காலி குடங்களுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

குடிநீருடன் சாக்கடை கழிவுகள் கலந்து வரும் நீர் தொடர்பாக மக்கள் கூறுகையில், பல மாதங்களாக இந்த பிரச்னை உள்ளது. குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் குடிநீருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com