ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

News image
Updated On :24 மே 2023, 8:12 am

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. பின் விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, தத்துவார்சனை, தீபாராதனை, பிரசாத விநியோகம், நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image

கும்பாபிஷேக தினமான புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசனம், இரண்டாம் காலையாக பூஜை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு, விமானம் மற்றும் ஜடாமுனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின் மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை சாமிரெட்டி கண்டிகை கிராம மக்கள்  சேர்ந்தவர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.