பொள்ளாச்சி அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையம் பகுதியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவக்குமார், சஞ்சய், ரமேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க: தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கை
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.