தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு? செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு? போராட்டத்தில் குறித்த பயிற்சி மருத்துவர்கள்

News image
Updated On :31 மே 2023, 11:29 am

DIN

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இயங்கி வருகிறது. மிக முக்கிய மருத்துவமனையாக உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

Story image

மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மருத்துவர்களும் பயிற்சி மருத்துவத்துராக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் கூறி மருத்துவமனை, வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story image

நரம்பியல் துறையை சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளித்து வருவதாகவும், நேற்று கூட மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.