தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவியில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.