இதையடுத்து அக்டோபர் மாதம் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரிலிருந்து பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் நடைபெற்ற போது காவல் துறையினரை, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் அமர் பிரசாத் ரெட்டி, மாநிலப் பொதுச் செயலர் பால கணபதி, கடையம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் ரத்தினகுமார், ஆழ்வார்குறிச்சி பேரூர் தலைவர் குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சடாச்சரவேல், வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் காந்தி, மாவட்ட பட்டியல் அணிப் பொதுச்செயலர் முருகன், இந்து முன்னணி நகரச் செயலர் பரமசிவன், கடையம் மேற்கு ஒன்றியத் தலைவர் செந்தில் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.