தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை - நெல்லை இடையே நவ.8, 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும்.
இதையும் படிக்க: 5 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு!
நவ.9, 16, 23ல் ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அதிகாலை 3.45க்கு சென்னை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.