நாமக்கல்: நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்குரைஞர் மணிகண்டன் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). வழக்குரைஞரான இவர், வெள்ளிக்கிழமை இரவு எருமப்பட்டி-கஸ்தூரிபட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் அங்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.