மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சென்னையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்

சென்னை கே.கே.நகரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :6 நவம்பர் 2023, 8:17 am

DIN

சென்னை: சென்னை கே.கே.நகரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை கே.கே.நகர் ஆறாகாடு சாலையில் திங்கள்கிழமை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காரில் வந்த இலங்கைத் தமிழர் கமலநாதன், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் உள்பட நான்கு பேரும் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி கத்தை கத்தையாக காரில் ரூ.1 கோடியை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையும் படிக்க | மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் காணொலி உரைக்கு தடை: வைகோ கண்டனம்

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

காரில் கத்தை, கத்தையாக பணத்தை எடுத்து வந்த இலங்கை தமிழர் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.