திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.

ஏற்கெனவே, சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கைழுத்திடாததால், மதுரை காமராஜர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் கடந்த வாரம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை பொன்முடி புறக்கணித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com