கோவை குற்றாலத்தில் வெள்ளம்! குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்!!

கோவை குற்றாலத்தில் வெள்ளம்! குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்!!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் நலன்கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது.


கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் நலன்கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது.

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் குற்றால நீர்வீழ்ச்சி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com