பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இ-சேவை மையங்களில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் குவிந்தனர். சான்றுகள் கிடைப்பதில் கால தாமதம், சர்வர் பிரச்னை போன்ற காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்பிறகு பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...