பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னையில் நாளைமுதல் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர்!

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் உள்ளிட்டோரும் தொடரில் பங்கேற்கின்றனர். 

News image
கோப்புப் படம்
Updated On :16 நவம்பர் 2023, 4:15 pm

DIN

சென்னையில் நாளைமுதல் (நவ. 17) நடைபெற உள்ள ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 417 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடர் நவ. 23ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. 

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் உள்ளிட்டோரும் தொடரில் பங்கேற்கின்றனர். 

பிரதான பிரிவில் 174 ஆண்கள், 63 பெண்கள் உட்பட 11 பிரிவில் 417 பேர் பங்கேற்பதாக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு சேர்த்து ரூ.8.8 லட்சம் பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் நட்சத்திர வீரர்களான அபய் சிங், ரமித் டாடன், வேலவன் செந்தில்குமார், சுராஜ் சந்த் பங்கேற்கின்றனர். 

இதேபோன்று பெண்கள் பிரிவில் நட்சத்திர வீராங்கனைகளான தன்வி கண்ணா, அனாஹத் சிங், ஊர்வசி ஜோஷி, ஜேனட் வைதி உள்ளிட்டோரும் தொடரில் பங்கேற்கின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.