தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாராபுரம் அருகே கார் - டேங்கர் லாரி மோதல்: 5 பேர் பலி!

தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி

News image

தாராபுரம் அருகே டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து காட்சிகள்.

Updated On :16 நவம்பர் 2023, 2:17 pm

DIN

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தாராபுரம் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்த போது, கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றிக் கொண்டு பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரியும், காரும் தாராபுரம்-பழனி சாலை, மனக்கடவு பகுதி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

வியாழக்கிழமை (இன்று) மாலை சுமார் 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலங்கியம் காவல் துறையினர், உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Story image

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் பயணித்த ஐந்து நபர்களும் பலியாகி உள்ள நிலையில், பழனியில் இருந்து செல்கிறார்களா? அல்லது கொடைக்கானல் பகுதியில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்கிறார்களா? என்கிற கோணத்திலும், விசாரித்து வருகின்றனர்.

Story image

விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள் தமிழ்மணி, பாலகிருஷ்ணன், சித்ரா, செல்வராணி, கலாராணி எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் பயணித்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு இவர்கள் எந்த ஊர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.