தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை: திருச்செந்தூரில் 33 மி.மீ. பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்செந்தூரில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்செந்தூரில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு நகருகிறது.

இக்காற்று சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதில், சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தூத்துக்குடியில் 8.3 மி.மீ., குலசேகரப்பட்டணம் 15மி.மீ., சாத்தான்குளம் 20.8 மி.மீ., திருச்செந்தூர், காயல்பட்டிணம் 33 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com