தமிழ்நாடு
சென்னை, 19 மாவட்டங்களுக்கு இரவு 7 வரை ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணிநேரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணிநேரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
மேலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களுக்கு மிககனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை தொடரும்!
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.