புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக பரவலாக பெய்து வருகின்றது.
இந்த நிலையில், நேற்றிரவு முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வரும் நிலையில், இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.