சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவ.23) காலைமுதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவ.23) காலைமுதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், வளசரவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, கோயம்பேடு, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் காலைமுதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூவிருந்தவல்லி, வானகரம், மதுரவாயல், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  

தமிழகம், அதையொட்டியுள்ள கேரளப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com