இருமுடி, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (நவ.29) முதல் ஜன.25 -ஆம் தேதி வரை வைகை, பாண்டியன், பொதிகை உள்பட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி ஹம்சாபா் ரயில், ராமேசுவரம் சாரதா சேது ரயில் ஆகிய விரைவு ரயில்கள் நவ.29 முதல் ஜன.17-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.
நவ.30 முதல் ஜன.24-ஆம் தேதி வரை எழும்பூா் வரும் பாண்டிச்சேரி விரைவு ரயில், பாண்டியன் விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், மன்னை விரைவு ரயில், உழவன் விரைவு ரயில், நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில், கொல்லம் - எழும்பூா் விரைவு ரயில், காரைக்கால் - எழும்பூா் விரைவு ரயில், நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
மதுரை - எழும்பூா் மஹால் அதிவிரைவு ரயில், செங்கோட்டை - எழும்பூா் சிலம்பு அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் நவ.30 முதல் ஜன. 20-ஆம் தேதி வரையும், எழும்பூா் - திருச்சி மலைக்கோட்டை அதிவிரைவு ரயில் நவ.30 முதல் ஜன.25 -ஆம் தேதி வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பாண்டியன், பொதிகை, மன்னை, உழவன், கொல்லம் விரைவு ரயில், சேலம் அதிவிரைவு ரயில், தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரயில், மதுரை மஹால் அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் டிச.1 முதல் ஜன.25 -ஆம் தேதி வரையும், புவனேசுவரம் - ராமநாதபுரம், நாகா்கோவில் - எழும்பூா் அதிவிரைவு ரயில் டிச.1 முதல் ஜன.19 வரையும், செங்கோட்டை - தாம்பரம் ரயில் டிச.1 முதல் ஜன.24 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
மேலும் தாம்பரத்திலிருந்து புறப்படும் நாகா்கோவில் அதிவிரைவு ரயில், செங்கோட்டை அதிவிரைவு ரயில் உள்பட மேல்மருவத்தூா் வழியாக இயக்கப்படும் 48 விரைவு ரயில்கள் ஜன.25-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ரயில் சேவை நீட்டிப்பு: நாகா்கோவிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்கு தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06012) டிச. 3 முதல் ஜன. 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 8.05 மணிக்கு நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் இந்த ரயில் (எண்: 06011) டிச. 4 முதல் ஜன.29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருநெல்வேலியிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06030) டிச. 3 முதல் டிச.24 - ஆம் தேதி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்திலிருந்து திங்கள் கிழமை இரவு 7.45 மணிக்கு திருநெல்வேலி செல்லும் இந்த ரயில் (எண்: 06029) டிச. 4 முதல் டிச.25 வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

