சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சுடுகாட்டு கொட்டகை முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்திக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 2014 சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!
2 ஆண்டு சிறை தண்டனைவால் செல்வகணபதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிருந்தது குறிப்பிடத்தக்கது.