மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் சிறை தண்டனை ரத்து!

சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 நவம்பர் 2023, 6:18 am

DIN

சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை  ரத்து செய்யப்பட்டுள்ளது. சுடுகாட்டு கொட்டகை முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்திக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 2014 சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி மேல்முறையீடு செய்திருந்தார்.  மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

2 ஆண்டு சிறை தண்டனைவால் செல்வகணபதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.