அதிகாரிகள் நினைத்தால் திட்டங்கள் வளரும்: மு.க. ஸ்டாலின்

விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு திட்டங்களை செயல்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு திட்டங்களை செயல்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,  நலத்திட்டங்களை முழுமையான ஈடுபாட்டுடன் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள்; அதிகாரிகள் நினைத்தால் அவை வளரும் எனக் குறிப்பிட்டார். 

மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், 

காலை உணவு திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com