விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு திட்டங்களை செயல்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நலத்திட்டங்களை முழுமையான ஈடுபாட்டுடன் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள்; அதிகாரிகள் நினைத்தால் அவை வளரும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,
காலை உணவு திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.