அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பட்டாசு கடையில் தீ விபத்து: 10 பேர் பலி

அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். 

News image
கோப்புப்படம்
Updated On :7 அக்டோபர் 2023, 2:56 pm

DIN

அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். 

தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென அருகிலுள்ள மற்ற பட்டாசு கடைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

கடையில் இருந்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதில் லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன. தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

லாரியின் வந்த பட்டாசுகளை இறக்கும்போது மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு விபத்தில் கடை ஊழியர்கள் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.