பழனி மலைக் கோயிலில் ரோப் கார் சேவை நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலைக்குச் செல்வதற்கு ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை கடந்த 19ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று நாளை 08.10.2023 முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.