கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடக அரசை கண்டித்து நாகையில் கடையடைப்பு!

காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில்  12 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

நாகையில் கடையடைப்பு

Updated On :11 அக்டோபர் 2023, 2:52 am

நாகப்பட்டினம்: காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில்  12 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படி,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க கோரியும்  காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில்  மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் இன்று நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள், மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் கடைகள் அடைத்துள்ளனர்.

Story image

நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்  விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட்டுள்ளன.

Story image

மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கார், ஆட்டோ, வேன் ஓட்டுநர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன.

Story image

குறிப்பாக சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணியில் இன்று மாலை 5 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.