இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அனல்மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 130 பேர் கைது

காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.

News image
Updated On :16 அக்டோபர் 2023, 8:06 am

DIN


காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை போலீசார் கைது செய்து வட்டம் 27-இல் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகத்திற்கு, நெய்வேலியில்  உற்பத்தியாகும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என என்எல்சி இந்தியா நிறுவனத்தை வலியுறுத்தி இரண்டாவது அனல் மின் நிலையம் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.  

தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க மாநிலப் பொதுச் செயலர் அ.பெ.ரவிந்திரன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தலைவர் காளிமுத்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சுந்தர் விமல்நாதன், தஞ்சாவூர் தங்கமுத்து, நாகப்பட்டினம் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், இரண்டாவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் 130 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்து வட்டம் 27-இல் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.