விஜயதசமி: ஆசிரியர்கள் பள்ளி வர உத்தரவு

விஜயதசமியையொட்டி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

விஜயதசமியையொட்டி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. 
அதேபோன்று இந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் அந்தப் பகுதியினைச் சார்ந்த பெற்றோர் விஜயதசமி தினத்தன்று அதாவது நாளை தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு வரக்கூடும். 
எனவே, ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com