சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது: விஜயகாந்த்
சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை பார்க்கும்போது, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பதிவில் பதிவிட்டிருப்பதாவது:
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, ஆளையே கடித்த கதையாக, தற்போது ஆளுநர் மாளிகையிலேயே வெடிகுண்டு வீசிய செயல், வண்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எத்தகைய நிலையில் உள்ளது என்பதற்கு, இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணம்.
இதையும் படிக்க | மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை 55,000-ஆக அதிகரிப்பு
அரசு கவனம் செலுத்தி, வெடிகுண்டு கலாசாரம் பரவுவதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு துணை போகாமல், கடுமையான தண்டனை வழங்கினால்தான், இது போன்ற குற்றங்கள் பரவாமல் தடுக்க முடியும்.
ஆளுநர் மாளிகையிலேயே, வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை பார்க்கும்போது, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.
எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.