சென்னை: கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தவர் முத்தமிழ் செல்வகுமார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டை குறித்து முத்தமிழ் செல்வகுமார் தெரிவிக்கையில் நான் எந்தக் கட்சியிலும் தற்போது இல்லை. எனக்கும் கருக்கா வினோத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும், எல்லா கட்சியினரின் வழக்கையும் நான் எடுத்து நடத்தியுள்ளேன்.
அதே போல் கடந்த 2020ல் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுக்க உதவினேன். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.