பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அம்பத்தூரில் காவலர்களை தாக்கிய சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 28 பேர் கைது

அம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை  தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image

கைது செய்யப்பட்ட 28 வடமாநிலத்தவர்கள்.

Updated On :28 அக்டோபர் 2023, 11:23 am IST

ஆவடி: அம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை  தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

அம்பத்தூர் அருகே பட்டறைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஆயுதபூஜை அன்று அங்கு பணியாற்றியவர்களுடன், அவர்களது நண்பர்களும் சேர்ந்து மதுபோதையில் இருந்துள்ளனர். 

அப்போது, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ரோந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இரு தரப்பினையும் சமாதானம் செய்துள்ளனர். 

அப்போது, அவர்களை  வட மாநிலத்தவர் தாக்கியதில், இரு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி இருந்துள்ளனர். தகவல் அறிந்து காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பிஹாரைச் சேர்ந்த ராம்ஜித் ராஜ்பன்சி (46), பிலாஸ்தாஸ் (43), ராசுகான் குமார் (22), சுராஜ் குமார் (18), பிண்டி ராஜ்வான்சி (31) ஆகிய 5 பேரை காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

மேலும், இந்த வழக்கு தொடர்பாக 28 வட மாநிலத்தவர்களை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.