பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஓட்டுநருக்கு நெஞ்சுவலி: பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!

வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

News image

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த தனியார் பேருந்து.

Updated On :28 அக்டோபர் 2023, 10:56 am IST

வாழப்பாடி: வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வாழப்பாடி வழியாக சென்ற தனியார் பேருந்து, இன்று சனிக்கிழமை காலை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அடுத்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறிய பேருந்து, சாலை தடுப்பில் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. 

Story image

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று, பேருந்து கண்ணாடிகளை உடைத்து, பேருந்து ஓட்டுநரான ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (33) மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.