வாழப்பாடி: வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வாழப்பாடி வழியாக சென்ற தனியார் பேருந்து, இன்று சனிக்கிழமை காலை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அடுத்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறிய பேருந்து, சாலை தடுப்பில் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று, பேருந்து கண்ணாடிகளை உடைத்து, பேருந்து ஓட்டுநரான ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (33) மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை அதிரடியாக ரூ.520 உயர்வு!
இந்த விபத்தால், சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 5 - நேரலை!

துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி! கர்நாடகத்தில் பதவியேற்ற 2 நாளில் அமைச்சர் ராஜிநாமா!

27 கருடசேவை... 18 நவநீத சேவை!

ஆபாசம், அருவருப்பு... பெத்தி படக்குழுவை விமர்சிக்கும் ஜான்வி கபூர் ரசிகர்கள்!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



