ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆபாசம், அருவருப்பு... பெத்தி படக்குழுவை விமர்சிக்கும் ஜான்வி கபூர் ரசிகர்கள்!

பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து...

Janhvi Kapoor and Ram Charan in the movie Peddi.

பெத்தி படத்தில் ஜான்வி கபூர், ராம் சரண். - படம்: யூடியூப் / டி சீரிஸ் தமிழ்.

Published On :

பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து இணையவாசிகளும் அவரது ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படம் நேற்று (ஜூன்4) உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளிலே ரூ.135.36 கோடி வசூலித்துள்ளது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூரைக் காட்சிப்படுத்தியுள்ள விதங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. இந்தப் படத்தின் டிரைலர் வெளியானபோதே இது குறித்த பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், அதிக சம்பளம் கொடுத்து நடிகைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவமானம் என்ற ஒரு பதிவுக்கு ஜான்வி கபூர் லைக் இட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சியம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரை மோசமான காமிரா கோணத்திலும் ஆபாசமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

நாயகன் ராம் சரணே நடிகையிடம் அத்துமீறி நடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் கடுமையாகியுள்ளன. ராம் சரண் படத்தில் சமூக அரசியல் போராட்டம் நடத்துவதும் நடிகைக்கு உடலின் நடுப்பகுதிக்கு க்ளோசப் வைத்திருப்பதும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Ram Charan's Peddi Slammed As 'Most Expensive Disrespect To Women'; Janhvi Seemingly Agrees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.