நாமக்கல்: திருச்செங்கோடு பொதுக்கூட்டத்தில் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்மையில் திருச்செங்கோடு தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவையில் நான் துதிப் பாடுவதாகவும், மக்கள் கோரிக்கைகள் குறித்து பேசுவதில்லை என குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை பதிவேடுகளை எடுத்து பார்த்தால் நான் என்ன பேசி உள்ளேன், எதற்காக பேசி உள்ளேன் என்பது தெரியவரும்.
இதையும் படிக்க: நவ.3ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!
இது தொடர்பாக என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க அவர் தயாராக உள்ளாரா? அவ்வாறு இல்லையெனில் பொதுக்கூட்டத்தில் பேசியமைக்கு என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.