மன்னார்குடி கர்த்தநாதபுரத்தை சேர்ந்தவர் ரோஸ்லீன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மாமியார் ஞானம்பாள் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தாயாரித்து மன்னார்குடியில் ஞானம்பாளுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 10 கிரவுண்ட் நிலத்தை மன்னார்குடி அடுத்த சேரன்குளத்தை சேர்ந்த டி.மனோகரன் என்பவர் அபகரித்து மோசடி செய்து இருப்பதாகவும், இதில் மனோகரனின் மனைவி சேரன்குளம் ஊராட்சித் தலைவர் அமுதா உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்ததுடன் இது குறித்து 2017 ஆம் ஆண்டு திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய்பட்டும் இது நாள் வரை மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகவும், இந்த வழக்கினை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.