பல்லடம் அருகே பரபரப்பு... 2 பெண்கள் உள்பட 4 பேர் வெட்டிக் கொலை

திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
பல்லடம் அருகே பரபரப்பு... 2 பெண்கள் உள்பட 4 பேர் வெட்டிக் கொலை
Published on
Updated on
1 min read


திருப்பூர்: திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேரை மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதில், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தோரின் சடலங்களை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் என்ன?, கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com