

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரெளடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மன்னூர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ரெளடி எபனேசர் (25) மீது நாட்டு வெடிகுண்டு வீசி கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட எபனேசர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.