கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று(செப்.6) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:
ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! கிருஷ்ணரின் உபதேசங்கள் நம் கடமைகளை நேர்மையாகவும், உண்மையாகவும் செய்ய தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர்கள் ஷிண்டேவுடன் சந்திப்பு!
தொடர்ந்து பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.