ஆலங்குளம்: கேரளத்திலிருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய லாரியை 40 நாட்களுக்கும் மேலாக அரசுப் பள்ளி முன்பாக போலீசார் நிறுத்தி வைத்துள்ளது குறித்து தினமணி இணையத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அந்த லாரியை போலீசார் அகற்றி வேறு இடத்திற்குக் கொண்டு சென்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கேரள கழிவுகளைக் கொண்டு வந்த லாரி ஜூலை மாதம் 27 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரியில் கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவு, பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவு உட்பட சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவிக்கும் சுமார் 10 டன் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு ஆலங்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த லாரி கடந்த 40 தினங்களுக்கும் மேலாக ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து சில நாள்கள் அந்த லாரியை காவல் நிலையம் அருகில் நிறுத்தினர்.
அரசுப் பள்ளி முன் 40 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கழிவு லாரி
இந்நிலையில் விடுமுறை தினமான புதன்கிழமை பள்ளி வாசல் முன்பு கழிவுகள் அடங்கிய லாரியை போலீசார் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) காலை வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிலிருந்து துர்நாற்றமும் வீசியதால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தனியார் பள்ளி முன்பு போலீசாரால் இப்படி நிறுத்த முடியுமா என மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். போலீசாரின் இந்த செயல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்தான செய்தி தினமணி இணையதளத்தில் இன்று காலை வெளியானது. செய்தி வெளியான சில மணி நேரங்களில் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் அந்த லாரியை ஆலங்குளம் போலீசார் அகற்றி வேறு இடத்திற்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அழைத்தால் ஆலோசித்து முடிவு: கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து!

3 முதல்வர்கள்: எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட வாக்குகளும் தோல்வி வித்தியாசமும்!

அன்று முதல்வனை நிராகரித்த விஜய்... இன்று!

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

