சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. 
சென்னை, புறநகரில் பரவலாக மழை!
Published on
Updated on
1 min read

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், மதுரவாயல், நொளம்பூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று (செப். 6) எச்சரித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com